Skip to main content

Google ads

குளிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் !

 குளிப்பது என்பது அன்றாட நிகழ்ச்சி என்றாலும் எப்போது குளிக்க வேண்டும்: எப்படிக் குளிக்க வேண்டும்; என்ற பொதுவான விதிமுறைகளைப் பலர் தெரிந்து வைத்துக் கொள்வதில்லை.

இதனால் சிலர், சில சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள்.தெரிந்தவர்களுக்கு இது சின்னச் செய்தியாக இருக்கலாம். தெரியாதவர்களுக்கு இது அரிய தகவல்களாக இருக்கும்.உடல் வெப்பம் ஆளுக்கு ஆள் வித்தியாசப்படுகிறது.



இதனால் சாதாரண வெப்ப நிலை உள்ளவர்கள் காலை 5 மணியிலிருந்து 7 மணிக்குள் குளிப்பது நல்லது.மாலையில் 5 மணியிலிருந்து 6 மணிக்குள் குளித்து விடுவது நல்லது.

உடல் வெப்பம் அதிகம் உள்ளவர்கள் இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் குளிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது. குளிக்கத் துவங்குமுன் வெந்நீரில் குளிப்பவர்கள் ஒரு டம்பளர் தண்ணீர் சாப்பிட்டுவிட்டுக் குளிக்கவேண்டும். 

தண்ணீரில் குளிப்பவர்கள் இளம் சூடான வெந்நீர் ஒரு டம்ளர் குடிக்க வேண்டும்.இதனால் உடல் நிலை சமனப்படுத்தப்படுகிறது என்கிறது இயற்கை வைத்தியம்.

குளிப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் :-

குளிப்பவர்களின் வயிறு காலியாக இருக்கவேண்டும்.

மலஜலம் கழித்து விட்டே குளிக்கவேண்டும். சாப்பிட்டு விட்டும் குளிக்கக் கூடாது உணவின் செரிமானம் நடக்கும் வேளையில் குளிப்பதால் இரத்தம் வேறு வழியில் திரும்பும் நிலை உண்டாகிறது.

குளிக்கவேண்டும் என்றால் சுமார் மூன்று மணி நேரத்திற்கு முன்பு சாப்பிட்டிருக்க வேண்டும் என்கிறது இயற்கை வைத்தியம்.

குளிக்கத் துவங்குமுன், தண்ணிரையோ, அல்லது வெந்நீரையோ எடுத்த எடுப்பில் தலையில் ஊற்றக்கூடாது.

முதலில் ஒரு குவளை நீரைப் பாதத்திலிருந்து ஆரம்பித்து முழங்கால், இடுப்பு, மார்பு, முகம். பின் உச்சித் தலை என்ற வரிசையில் ஊற்றிக் கொண்டே போய் பிறகுதான் தலைக்கு ஊற்றிக் கொள்ள வேண்டும். குளிக்கும் வெந்நீர். கடும் வெந்நீராக இருக்கக்கூடாது.

மிகக் குளிர்ந்த தண்ணீராகவும் இருக்கக் கூடாது. உடல் உஷ்ணத்திற்கு ஏற்ற வகையில் இருக்கவேண்டும்.

குளிக்கும் இடம் வெளிக்காற்று வீசாத இடமாக இருக்கவேண்டும்.

பாத் ரூமில் மின் விசிறியைப் பொருத்தக் கூடாது. எண்ணெய்த் தேய்த்துத் தலை முழுகும் நிலை இருந்தால் சிகைக்காய்த் தூள், இலுப்பைப் பிண்ணாக்குத் தூள், பாசிப் பயிறு தூள் கலந்து உடலிலுள்ள எண்ணெய்ப் படலத்தை நீக்க வேண்டும்.

உடம்பில் துணி இல்லாமல் குளிப்பதுதான் நல்லது. இருப்பினும் இடம், காலம், ஏவலறிந்து செயல்படுவது உத்தமம். குளிக்கும் கால அளவு, இருபது நிமிடங்கள் இருக்கலாம்.

முப்பது நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொள்ளக் கூடாது.

வெயில் காலத்தில் சுரப்பிகள் தீவிரமாகச் சுரப்பதால் கழிவுப் பொருட்கள் அதிகமாக வெளியேறுவதால் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று வேளைகள் கூடக் குளிக்கலாம். குளித்தவுடன் துண்டால் அழுத்தித் தேய்த்து ஈரத்தைப் போக்கி உடலில் சூடு உண்டாக்க வேண்டும்.

ஈரத்தோடு, ஈர உடைகளோடு வெகு நேரம் இருக்கக்கூடாது. முகத்தில் எண்ணெய் சுரப்பிகள் அதிகம் இருப்பதால் முகத்தைச் சோப்பு நுரையால் தேய்த்துக் கழுவ வேண்டும். குளிக்கும் போது வெறும் உடலை மட்டும் கழுவாமல் மறைவான உறுப்புக்களையும் கை, கால், முகம், வாய், பல் முதலியவற்றையும் தேய்த்துக் கழுவ வேண்டும்.

கண்ட கண்ட சோப்புக்களைத் தேடி அலைந்து வாரத்திற்கு ஒரு சோப்பு என்று இனத்தை மாற்றக் கூடாது. சந்தன சோப்பு மற்றும் மூலிகை கலந்த சோப்புக் களையே உபயோகிக்க வேண்டும்.

ஈரத்தைத் துடைத்தவுடன், உடலை உடைகளால் மூடிப்பாதுகாக்க வேண்டும். காற்றுப் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாகக் குழந்தைகள் விஷயத்தில் கவனம் அதிகம் செலுத்த வேண்டும்.

சிலர் காலையில் குளிப்பார்கள். சிலர் மாலையில் குளிப்பார்கள். இன்னும் சிலர் இரவில் குளிப்பார்கள். பழக்கம் என்று ஒரு வழக்கத்தை உண்டாக்கிக் கொண்டவர்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. வழக்கத்திற்கு மாறாகக் குளிக்கும் போதுதான் சில உபத்திரவங்கள் ஏற்படுகின்றன.

இதனால் தலைவலியோ. சளித் தொல்லையோ உண்டாகுமே தவிர, பெரும் பாதிப்புக்கள் எதுவும் தோன்றுவதில்லை.

தினசரி குளிக்காமலே இருப்பதுதான் தவறு.குளிப்பதால் பல நன்மைகள் உண்டு. ஆரோக்கியமான வாழ்வுக்கு குளிப்பது மிக அவசியம்.

குளிப்பதால் சரும நோய்கள் நரம்புத் தளர்ச்சி நோய்கள், மலச்சிக்கல், மூலநோய், குடல் புண், வாய்வுத் தொல்லை, வயிற்றுவலி, சிறுநீர்த் தொல்லை. மூட்டுவாத நோய்கள், தலைவலி ஆகியவை நீங்குகின்றன.

தினசரி குளிப்பதால் நம் உடல் நோய் எதிர்க்கும் சக்தியைப் பெறுகிறது. சுறுசுறுப்பையும் வலிமையையும் தருகிறது.

குளிப்பதற்கு வெந்நீரைவிடத் தண்ணீரே நன்மை தருகிறது.ஆகவே களிப்பைத் தரும் குளிப்பை அலட்சியப் படுத்தி விடவேண்டாம்.

Comments

Popular posts from this blog

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்

ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன?

   ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவம் என்பது 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள சிகிச்சைமுறைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். இது லைக் க்யூர்ஸ் லைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒரு ஆரோக்கியமான நபருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு இதே போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம். ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தாவரங்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை மிகக் குறைந்த அளவுகளில் நீர்த்தப்படுகின்றன. ஹோமியோபதியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று தனிப்படுத்தல் ஆகும். ஹோமியோபதிகள் ஒவ்வொரு நபரின் அறிகுறிகளும் தனிப்பட்டவை என்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்கள். எனவே, மருந்துகளை பரிந்துரைக்கும் போது, ஹோமியோபதி நோயாளியின் ஆரோக்கியத்தின் உடல் அறிகுறிகளை மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மன அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். சில விமர்சகர்கள் ஹோமியோபதி மருந்துகள் அவற்றின் மிகவும