Skip to main content

Google ads

வாகன புகையால் மனிதர்களுக்கு ஏற்படும் தீமைகள் -அதை தடுக்கும் வழிமுறைகள்

 போக்குவரத்து வசதிகள் பெருகப்பெருக அதனால் சில நன்மைகளும், சில தீயைகளும் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம்.

கார், பஸ், லாரி, ஆட்டோ போன்ற வாகனங்களால் மனிதன் பல வசதிகளைப் பெற்றுச் சுகமாக வாழ்கிறான். அதே சமயத்தில் சில துயரங்களையும் சந்திக்கிறான். போக்குவரத்து வாகனங்களைச் சரியான முறையில் பராமரிக்காமல் இத் தீமைகள் மெள்ள மெள்ளப் பெருகிவருகின்றன.

வாகனங்களால் கார்பன் மோனாக்ஸைடு என்ற விஷவாயு பரவி மனிதனின் ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது. மோட்டார் வாகனங்கள் வெளியிடும் கழிவுகளால் ஆண்டுதோறும் பல மில்லியன் டன் எடையுள்ள சல்பர், மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடுகள் காற்று மண்டலத்தில் கலக்கிறது. இதனால் பல்வேறு நோய்களுக்கு மனிதன் ஆளாகிறான்.



காற்றிலுள்ள நீராவியுடன் சல்பர், நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் இரசாயனப் பொருள்கள் கலந்து அமிலங்களை உருவாக்குகின்றன. இதனால் மழை நீரும் அமிலமாகி ஏராளமான சுகாதாரக் கேடுகளை உண்டாக்குகிறது. 

கலப்பதால் மனிதனுக்கு என்ன சுகக் கேடு உண்டாகிறது? மயக்கம் உண்டாகிறது. தலைவலி உண்டாகிறது. காதில் ஒலி அதிர்வுகள் உண்டாகின்றன. வாந்தி வருகிறது. சுய நினைவு தவறுகிறது. கால்களில் வளிமை குன்றிவிடுகிறது. இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. மூளைத்தாக்கு ஏற்படுகிறது. வாதக் கோளாறுகள் உண்டாகின்றன.

கார்பன் மோனாக்சைடு விஷம் காற்றில் கலப்பதால் மனிதனுக்கு என்ன சுகக் கேடு உண்டாகிறது?

 மயக்கம் உண்டாகிறது. தலைவலி உண்டாகிறது. காதில் ஒலி அதிர்வுகள் உண்டாகின்றன. வாந்தி வருகிறது. சுய நினைவு தவறுகிறது. கால்களில் வளிமை குன்றிவிடுகிறது. இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. மூளைத்தாக்கு ஏற்படுகிறது. வாதக் கோளாறுகள் உண்டாகின்றன.

இவை எல்லாம் ஒரே நாளில் உண்டாகிறதா? இல்லை. விஷவாயுவை நீண்டகாலமாகச் சுவாசித்து வருபவர்களுக்கு இந்தக் கேடுகள் படிப்படியாகத் தோன்றுகின்றன.கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் காற்று மண்டலத்திலுள்ள கார்பன்டை ஆக்ஸைடு வாயுவின் அளவு சுமார் 12 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்று கணக்கிட்டிருக் கிறார்கள்.

மனிதனுக்குத் தோன்றும் மறைமுகமான நோய்களுக்கு இந்த விஷக் காற்றுகளே காரணம் என்று அறியும்போது நம்மைத் திடுக்கிட வைக்கிறது.

விஷக் காற்று தூசிகள் முதன் முதலாக நம்மைத் தாக்குவது சுவாசக் கோசங்கள் மூலம்தான். இதனால் சுவாசம் அடைபடுகிறது. தோல் நோய்கள் உண்டாகின்றன. நூரையீரல் நோய்கள் பெருகிவருகின்றன. உடல்நலம், மன நலம் பாதிக்கப்படுகிறது.

கார்பன் மோனாக்ஸைடு அதிகமாக உருவாகிவிட்ட சமயங்களில் மூச்சடைப்பை உண்டாக்கி மரணத்தையும் உண்டாக்கலாம். எரியாத ஹைட்ரோ கார்பன்கள் புற்று நோயையும் உண்டாக்குகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இதற்கு என்ன செய்யலாம்? வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கமுடியுமா? நகரத்தை விட்டுக் கிராமங்களுக்கு ஓடிவிட முடியுமா? காற்றுத் தூய்மை கெடுவதைத் தனி மனிதனால் தடுக்கமுடியாது. வண்டி வாகனங்களை உபயோகிப்பவர்கள் தடுப்பு: முறைகளைச் செய்யலாம். பழுதுபட்ட வாகனங்களைச் சீர்படுத்தலாம்..

பொதுமக்கள் என்ன செய்யலாம்? முடிந்தவரை சுத்தமான காற்றைச் சுவாசிக்க முயலவேண்டும். இதுலே சிறந்த வழி,

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

இளம் நரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய தீர்வு

இளநரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய இயற்கை தீர்வு ✍️ தேவையான மூலப்பொருட்கள்: 1.மருதாணி இலை - 1 கைப்பிடி 2.கரிசலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி 3.கறிவேப்பிலை - 1 கைப்பிடி 4.எலுமிச்சை - 1 பழம் ✍️ செய்முறை : 1 - 3 குறிப்பிட்ட இலையை தண்ணீர் விட்ட மைய்ய அரைத்து கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து அரைத்து கொள்ளவும் ✍️ பயன்படுத்தும் முறை: வாரம் ஒரு முறை தலை முடியில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை சீகக்காய் அல்லது உங்கள் தலைக்கு பொருந்தும் ஷாம்பூ பயன்படுத்துங்கள் ✍️ கடைபிடிக்க வேண்டியவை: 1. இளநரை மறைய குறைந்தது 10 வாரம் விடாது பயன்படுத்தினால் உறுதியான பலன் கிடைக்கும் 2.அடிக்கடி எண்ணெய் மற்றும் ஷாம்பூ மாற்ற வேண்டாம் 3.இந்த முடியில் பூசும் பொழுது முடியில் எண்ணெய் பசை இருந்தால் சுத்தமாக பலன் கொடுக்காது, தேவையான நேரத்தில் மட்டும் தயார் செய்து தலையில் தடவுங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்து காய்ந்த கலவை பலன் கொடுக்காது 4.முடிந்த அளவு அந்த 30 நிமிடம் காய்வதும் வெயிலில் காய வைத்தால் இன்னும் மிக நல்ல பலனை பெறலாம் 5.இளநரை என்பது 20-40 வயதிருனருக்கு மட்டுமே பலன் கொடுக்கும் அதற்கு மேல் ...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...