Skip to main content

Google ads

நாடிசுத்திப் பிராணயாம பயிற்சி செய்முறை-பலன்கள்

 நாடிசுத்திப் பிராணயாம பயிற்சி 

 வியாதிகளைப் போக்குவதற்குக் இந்த ஆசனங்களைப் பயின்று வருவதுடன், முக்கியமாகப் பயிற்சிகள் ஆரம்பிக் கும் போதும் முடிக்கும் போதும், பத்து நிமிடம் வரை நாடி சுத்திப் பிராணாயாமம் செய்து வரவும்.

 எல்லா வியாதி களுக்குமே ஆசனப் பயிற்சிகளுடன் அவசியம் நாடிசுத்தி செய்ய வேண்டுமென்பதால் அதனுடன் சேர்க்காமல் தனி யாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கோபம், பயம், கவலை, மன அதிர்ச்சி இவைகளைப் போக்க எந்த மருந்துகளினாலும் முடிவதில்லை. ஆனால் யோகப் பயிற்சியின் மூலம் இதை அனைத்தையுமே நீக்கி பூரண பலன் கிடைக்க செய்யலாம். 

மனம் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு தனியாக ஓர் இடத்தில் அமர்ந்து ஐந்து நிமிடம் நாடிசுத்தி அல்லது உஜ்ஜயி பிராணாயாமம் செய்வதுடன் ஐந்து நிமிடம் சாந்தி ஆசனமும் செய்ய வேண்டும்.

 இந்த ஆசனங்கள் செய்யும் போது மனதை எங்கும் சிதற விடாமல் ஒரு நிலைப் படுத்த வேண்டும்.

 மனதாக வியாதி உள்ளவர்கள் ஆரம்பத்தில் தாமே இப்பயிற்சியை செய்வதை விட யோகாசன நிபுணரைக் கலந்து கொண்டு அவரின் ஆலேசனையின் பேரில் உடல் நிலைக்குத் தக்கவாறு பயிற்சிகள் செய்ய வேண்டிய நேர அளவைத் தெரிந்து செய்வது மிக நன்று.

ஆட்சிசிக்சை முறைக்குரிய ஆசனப் பயிற்சிகளைச் சிறிது சிறிதாக மேற்கொள்ள வேண்டும். ஆசனப் பயிற்சியின் பலன் பூரணமாக கிடைக்கும் வரை ஆண் பெண் சேர்க்கை யை விலக்க வேண்டும். 

உணவு விஷயத்தில் மிக கவனம் செலுத்த வேண்டும். மிதமான சத்துள்ள உணவு வகைகளை நோய்களுக்கு தக்கவாறு சரியான முறையில் சாப்பிடவும்.

நோய் குணமடைந்த பிறகும் ஆசனப் பயிற்சிகள் செய்வு தை நிறுத்தி விடாமல் தொடர்ந்து செய்து வந்தால் வியாதி யே வராமல் இருப்பதுடன் உடல் நலம் குறைவின்றி நெடு நாள் ஆரோக்கியமாக வாழலாம். 

பிராணாயாம பயிற்சியை செய்ய ஆசனத்தில் அமரும்போது நிமிர்ந்தபடி அமர்ந்து உடலை நேராக வைக்க

வேண்டும். முதுகு தண்டு சிறிதும் வளையாமல் நேராக இருக்கும்படி அமர்ந்திருக்க வேண்டும்.

உடலின் கழுத்து, மார்பு, தலை, ஆகியவை ஒரே நேர் கோட்டில் அமைந்திருக்க வேண்டும். முதுகை வளைத்துக் கொண்டு பயிற்சியை மேற்கொண்டால் உடலுக்கு கேடாகும்.

சுவாசத்தினை ஒழுங்குபடுத்துகின்ற நரம்பு மையம் எல்லா நரம்புகளையும் கட்டுப்படுத்துகின்றது. ஆகையால் முதலில் மூச்சினை நம் வயப்படுத்த வேண்டும். 

 செய்முறை-1

வலக்கைப் பெரு விரலால் வலது நாசியை அடைத்து இடது நாசியின் வழியே பிராணவாயுவை முடிந்தவரை பல மாக உள்ளுக்குள் இழுக்க வேண்டும். உடனே வலது கை மோதிர விரலால் இடது நாசியை அடைத்து வலக்கைப் பெருவிரலை எடுத்து வலது நாசியின் வழியாக மூச்சை வெளியே விடவும்.

அதற்கு பிறகு மறுபடியும் வலது நாசியின் வழியாக மூச்சை பலமாக உள்ளுக்குள் இழுத்து நிறுத்தாமல் உடனடி யாக வலதுகைப் பெருவிரலால் வலது நாசியை அடைத்து வலக்கை மோதிர விரலை எடுத்து இடது நாசியின் வழி யாக மூச்சை வெளியில் விட வேண்டும். இதே போல் மாறி மாறி ஏழு முதல் பத்து தடவை இப்பயிற்சியை செய்யவும். 

பலன்கள்:

இந்த பயிற்சியின் மூலம் கழுத்து வீக்கம், மந்தாகினி, பல வீனம், பீனிசம், மூக்குசம்பந்தமான நோய்கள் அணுகாது. மார்பு வலி, ஈளை இருமல், க்ஷயம், ஆஸ்துமா, வாயு பித்தம், உடல் சூடு ஆகிய நோய்கள் நீங்கி நாடி நரம்பு களுக்கு சுத்தமான இரத்தம் நன்கு பரவும்.

 செய்முறை-2

இரண்டு மூக்குத் துவாரங்களினால் பிராணவாயவை வேக மாக உள்ளுக்குள் இழுத்து நிறுத்தாமல் உடனேயே வேகமாக உள்ளழுத்து மூச்சை வேகமாக வெளியில் விடவும். இதே போல் ஏழு முதல் பத்து தடவைப்பயிற்சி செய்ய வேண்டும்.

 பலன்கள்:

சகல விதமான கபத்தையும் க்ஷயரோகக் கிருமிகளையும் ஒழிக்கும். அதிக காய்ச்சல் இருக்கும் ஒருவர் இந்த பயிற்சி யை செய்தால் முற்றிலும் காய்ச்சல் குறைந்து விடும். 

 செய்முறை-3

இரண்டு மூக்குத் துவாரங்களிலும் ஒரே சமயத்தில் பிராண வாயுவை பலமாக உள்ளுக்கு இழுத்து முடிந்தவரை உள்ளே நிறுத்திப் பின்பு இரண்டு மூக்குத் துவராங்களிலும் மெது வாக வெளியில் விடவும். இதே போல் ஏழு முதல் பத்து தடவை செய்யவும். 

பலன்கள்:

இப்பயிற்சியினால் சிரசில் உள்ள சூடு நீங்கும். அழகு ஏற்படும். முகம் வசீகரமாக இருக்கும். இருமல் க்ஷயம் மார்புச் சளி ஆகியவை நீங்கும்.

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

ஆசன அரிப்பு பிரச்சனையை சரிசெய்யும் வழிமுறைகள்

 உணவை உண்ணுவதற்கு ஒரு வாயும், உண்ட உணவை வெளியே தள்ளுவதற்கு ஒரு வாயிலும் என இரண்டு அமைப்புக்கள் உடலில் படைக்கப் பட்டிருக்கின்றன. இரண்டும் சுத்தமாக, சுகாதாரத்தோடு இருந்தால் எவ்விதத் தொல்லைகளும் இந்த உடலுக்கு வருவதில்லை. பாதுகாப்புக் குறையும்போது இந்த உறுப்புக்கள் பழுதடைகின்றன. இதனால் சில உபத்திரவங்களும் உண்டாகின்றன. ஆசன வாயில் ஏற்படும் அரிப்பு இவற்றுள் ஒன்று.அரிப்பு என்பது ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. உள் நோயின் அடையாளம். வரப்போகும் ஒரு நோயின் அறிவிப்பு. இதற்குப் பரிகாரம் தேடாவிட்டால் ஒரு நிரந்தரத் தொல்லையாகவும் அமைந்துவிடலாம். ஆசனவாய் அரிப்புக்குப் பல காரணங்கள் உண்டு. குடல் புழுக்கள், பூஞ்சைக் காளான் தொற்றுதல், நரம்புக் கோளாறுகள், அலர்ஜி ஆகியவற்றை இதற்குக் காரணங்களாகச் சொல்லுகிறார்கள். முக்கியமாகச் சொல்லப்படும் காரணங்களுள் அரை குறையாக மலம் கழிப்பதும் ஒன்று. முழுமையாகக் கழிவுப் பொருள்கள் வெளியே தள்ளப் படாமல் தேக்கி வைக்கப்படுவதால் அதனால் உறுத்தல் ஏற்பட்டு அரிப்பு உண்டாகிறது. மலச்சிக்கல், மூலம் (பைல்ஸ்) பௌத்திரம், வயிற்றில் புளிப்பு அதிகமாவதாலும் ஆசனவாய் அரிப்பு ஏற்படுகிறது. சில சம...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...