Skip to main content

Google ads

நாடிசுத்திப் பிராணயாம பயிற்சி செய்முறை-பலன்கள்

 நாடிசுத்திப் பிராணயாம பயிற்சி 

 வியாதிகளைப் போக்குவதற்குக் இந்த ஆசனங்களைப் பயின்று வருவதுடன், முக்கியமாகப் பயிற்சிகள் ஆரம்பிக் கும் போதும் முடிக்கும் போதும், பத்து நிமிடம் வரை நாடி சுத்திப் பிராணாயாமம் செய்து வரவும்.

 எல்லா வியாதி களுக்குமே ஆசனப் பயிற்சிகளுடன் அவசியம் நாடிசுத்தி செய்ய வேண்டுமென்பதால் அதனுடன் சேர்க்காமல் தனி யாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கோபம், பயம், கவலை, மன அதிர்ச்சி இவைகளைப் போக்க எந்த மருந்துகளினாலும் முடிவதில்லை. ஆனால் யோகப் பயிற்சியின் மூலம் இதை அனைத்தையுமே நீக்கி பூரண பலன் கிடைக்க செய்யலாம். 

மனம் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு தனியாக ஓர் இடத்தில் அமர்ந்து ஐந்து நிமிடம் நாடிசுத்தி அல்லது உஜ்ஜயி பிராணாயாமம் செய்வதுடன் ஐந்து நிமிடம் சாந்தி ஆசனமும் செய்ய வேண்டும்.

 இந்த ஆசனங்கள் செய்யும் போது மனதை எங்கும் சிதற விடாமல் ஒரு நிலைப் படுத்த வேண்டும்.

 மனதாக வியாதி உள்ளவர்கள் ஆரம்பத்தில் தாமே இப்பயிற்சியை செய்வதை விட யோகாசன நிபுணரைக் கலந்து கொண்டு அவரின் ஆலேசனையின் பேரில் உடல் நிலைக்குத் தக்கவாறு பயிற்சிகள் செய்ய வேண்டிய நேர அளவைத் தெரிந்து செய்வது மிக நன்று.

ஆட்சிசிக்சை முறைக்குரிய ஆசனப் பயிற்சிகளைச் சிறிது சிறிதாக மேற்கொள்ள வேண்டும். ஆசனப் பயிற்சியின் பலன் பூரணமாக கிடைக்கும் வரை ஆண் பெண் சேர்க்கை யை விலக்க வேண்டும். 

உணவு விஷயத்தில் மிக கவனம் செலுத்த வேண்டும். மிதமான சத்துள்ள உணவு வகைகளை நோய்களுக்கு தக்கவாறு சரியான முறையில் சாப்பிடவும்.

நோய் குணமடைந்த பிறகும் ஆசனப் பயிற்சிகள் செய்வு தை நிறுத்தி விடாமல் தொடர்ந்து செய்து வந்தால் வியாதி யே வராமல் இருப்பதுடன் உடல் நலம் குறைவின்றி நெடு நாள் ஆரோக்கியமாக வாழலாம். 

பிராணாயாம பயிற்சியை செய்ய ஆசனத்தில் அமரும்போது நிமிர்ந்தபடி அமர்ந்து உடலை நேராக வைக்க

வேண்டும். முதுகு தண்டு சிறிதும் வளையாமல் நேராக இருக்கும்படி அமர்ந்திருக்க வேண்டும்.

உடலின் கழுத்து, மார்பு, தலை, ஆகியவை ஒரே நேர் கோட்டில் அமைந்திருக்க வேண்டும். முதுகை வளைத்துக் கொண்டு பயிற்சியை மேற்கொண்டால் உடலுக்கு கேடாகும்.

சுவாசத்தினை ஒழுங்குபடுத்துகின்ற நரம்பு மையம் எல்லா நரம்புகளையும் கட்டுப்படுத்துகின்றது. ஆகையால் முதலில் மூச்சினை நம் வயப்படுத்த வேண்டும். 

 செய்முறை-1

வலக்கைப் பெரு விரலால் வலது நாசியை அடைத்து இடது நாசியின் வழியே பிராணவாயுவை முடிந்தவரை பல மாக உள்ளுக்குள் இழுக்க வேண்டும். உடனே வலது கை மோதிர விரலால் இடது நாசியை அடைத்து வலக்கைப் பெருவிரலை எடுத்து வலது நாசியின் வழியாக மூச்சை வெளியே விடவும்.

அதற்கு பிறகு மறுபடியும் வலது நாசியின் வழியாக மூச்சை பலமாக உள்ளுக்குள் இழுத்து நிறுத்தாமல் உடனடி யாக வலதுகைப் பெருவிரலால் வலது நாசியை அடைத்து வலக்கை மோதிர விரலை எடுத்து இடது நாசியின் வழி யாக மூச்சை வெளியில் விட வேண்டும். இதே போல் மாறி மாறி ஏழு முதல் பத்து தடவை இப்பயிற்சியை செய்யவும். 

பலன்கள்:

இந்த பயிற்சியின் மூலம் கழுத்து வீக்கம், மந்தாகினி, பல வீனம், பீனிசம், மூக்குசம்பந்தமான நோய்கள் அணுகாது. மார்பு வலி, ஈளை இருமல், க்ஷயம், ஆஸ்துமா, வாயு பித்தம், உடல் சூடு ஆகிய நோய்கள் நீங்கி நாடி நரம்பு களுக்கு சுத்தமான இரத்தம் நன்கு பரவும்.

 செய்முறை-2

இரண்டு மூக்குத் துவாரங்களினால் பிராணவாயவை வேக மாக உள்ளுக்குள் இழுத்து நிறுத்தாமல் உடனேயே வேகமாக உள்ளழுத்து மூச்சை வேகமாக வெளியில் விடவும். இதே போல் ஏழு முதல் பத்து தடவைப்பயிற்சி செய்ய வேண்டும்.

 பலன்கள்:

சகல விதமான கபத்தையும் க்ஷயரோகக் கிருமிகளையும் ஒழிக்கும். அதிக காய்ச்சல் இருக்கும் ஒருவர் இந்த பயிற்சி யை செய்தால் முற்றிலும் காய்ச்சல் குறைந்து விடும். 

 செய்முறை-3

இரண்டு மூக்குத் துவாரங்களிலும் ஒரே சமயத்தில் பிராண வாயுவை பலமாக உள்ளுக்கு இழுத்து முடிந்தவரை உள்ளே நிறுத்திப் பின்பு இரண்டு மூக்குத் துவராங்களிலும் மெது வாக வெளியில் விடவும். இதே போல் ஏழு முதல் பத்து தடவை செய்யவும். 

பலன்கள்:

இப்பயிற்சியினால் சிரசில் உள்ள சூடு நீங்கும். அழகு ஏற்படும். முகம் வசீகரமாக இருக்கும். இருமல் க்ஷயம் மார்புச் சளி ஆகியவை நீங்கும்.

Comments

Popular posts from this blog

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்

ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன?

   ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவம் என்பது 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள சிகிச்சைமுறைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். இது லைக் க்யூர்ஸ் லைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒரு ஆரோக்கியமான நபருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு இதே போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம். ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தாவரங்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை மிகக் குறைந்த அளவுகளில் நீர்த்தப்படுகின்றன. ஹோமியோபதியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று தனிப்படுத்தல் ஆகும். ஹோமியோபதிகள் ஒவ்வொரு நபரின் அறிகுறிகளும் தனிப்பட்டவை என்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்கள். எனவே, மருந்துகளை பரிந்துரைக்கும் போது, ஹோமியோபதி நோயாளியின் ஆரோக்கியத்தின் உடல் அறிகுறிகளை மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மன அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். சில விமர்சகர்கள் ஹோமியோபதி மருந்துகள் அவற்றின் மிகவும