Skip to main content

Google ads

தாய் பால் நல்லதா ? புட்டி பால் நல்லதா ? குழந்தை ஆரோக்கியத்திற்கு ?

 WHO என்று சுருக்கமாக அழைக்கப்படும் அகில உலகச் சுகாதார நிறுவனத்திற்கும். டின் பால், புட்டிப் பால் தயாரிக்கும் வியாபார நிறுவனங்களுக்கும் இடையில் இப்போது ஒரு போராட்டமே நடந்து கொண்டிருக்கிறது.

குழந்தைகளுக்கு ஊட்டும் செயற்கைப் பாலுணவைக் கட்டுப் படுத்த உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறது.

தாய்மார்களின் உள்ளங்களில் ஒரு தவறான எண்ணத்தை குழந்தைப் பால் தயாரிப்பாளர்கள் சிலர் பத்திரிகை, சினிமா விளம்பரங்கள் மூலம் பிரசாரம் செய்து வருகிறார்கள். தாய்ப் பாலை விடப் புட்டிப் பாலே புஷ்டி அளிப்பது, ஆரோக்கியம் அளிப்பது என்றெல்லாம் கருத்தைப் பரப்பிப் பாலுணவு விற்பனை மூலம் இந்தியாவில் மட்டும் 100 கோடி ரூபாய்க்கு மேல் ஆதாயம் தேடி வருகிறார்கள்.

இந்திய அரசு, டின்களில் விற்பனை செய்யும் குழந்தைப் பால் உணவை நான்கு மாத குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது என்று கட்டுப் பாடும் விதித்திருக்கிறது.

புட்டிப் பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு அப்படி என்ன கெடுதல்கள் ஏற்படுகின்றன? என்ற உண்மையை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். 

விளம்பரத்தால், வியாபாரத் தந்திரத்தால் தாய்ப் பாலின் சிறப்பைத் தெரிந்து கொள்ள முடியாமல், வியாபாரிகள் செய்து விடுகிறார்கள். இதனால் உண்மை நீறு பூத்த நெருப்புப் போலக் காட்சியளிக்கிறது.

தாய்ப்பாலின் நன்மைகள் :

மனிதன் தோன்றிய நாள் முதல், தன் குழந்தைக்கு ஒரு தாய், பாலூட்டி வளர்ப்பதைப் பார்க்கிறோம்.பிராணிகளும் மிருகங்களும் பாலூட்டி வளர்க்கின்றன.

 குட்டிகளுக்குப் இது இயற்கை முறையில் அமைந்த பால். கலப்படம் செய்ய முடியாத பால். எல்லாச் சத்துக்களும் தேவையான அளவில் பொருந்திய பால்.

உடல் வளர்ச்சிக்குத் தேவையான அளவில் அமினோ அமிலங்கள் இயற்கையாக இடம் பெற்ற பால், புரதச் சத்தும் நிரம்பப் பெற்ற பால். எல்லாத்தாது உப்புக்களும் இணைந்த நிகரற்ற பால்.

தாய்ப்பாலில் சீம்பால் என்று சொல்லப்படும் ஒரு விதச் சத்து சிறப்பாக அமைந்திருக்கிறது. இந்தப் பாலைக் குழந்தை சாப்பிடுவதன் மூலம் சிசுப் பருவத்தில் இளம்பிள்ளை வாதம், நிமோனியா, பற்சிதைவு போன்ற நோய்கள் தடுக்கப் படுகின்றன.

தாய்ப் பாலிலுள்ள இரசாயன அமைப்பு மூளை வளர்ச்சிக்குத் துணை செய்கிறது. கண்களுக்கு ஒளியைத் தருகிறது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தை நோய் எதிர்க்கும் சக்தியைப் பெறுகிறது. 

இதனால் தொற்று நோய்கள் இந்தக் குழந்தையிடம் வாலாட்டுவதில்லை. ஒரு தாய், குழந்தைக்குப் பாலூட்டுவதன் மூலம் தினசரி சுமார் 100 கலோரிகள் வரை சக்தியைப் பெறுகிறாள்.

இதனால் உடற்கட்டுக் குலைந்து போகாத வகையில் சிறப்பான பொலிவைப் பெறுகிறாள். தாய்ப்பாலில் பசும்பாலைவிட இரண்டு மடங்கு இரும்புச்சத்தும், தாமிரச் சத்தும் இருப்பதால் குழந்தைகள் சோகை நோயினால் பாதிக்கப்படுவதில்லை.

இதைவிட முக்கியமான ஒரு சிறப்பு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்குக் கிடைக்கிறது. பிரசவத்தால் விரிவடைந்த கர்ப்பப்பை சீக்கிரத்தில் இயற்கை நிலைக்குத் திரும்புகிறது. தாயின் உடல் நலமும் முன் இருந்து நிலைக்கு வருகிறது.

பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்புப் புற்று நோய் ஏற்படுவதில்லை என்கிறார்கள் புற்று நோய் ஆராய்ச்சியாளர்கள், தாய்ப் பால் கொடுத்துக் கொண்டு வருவதால் அடுத்த குழந்தை பிறப்பதைத் தள்ளிப் போட வாய்ப்பு ஏற்படுகிறது. தாய்ப் பால்குடிக்கும் குழந்தைகளின் தாடை எலும்புகள், தசைகள் நன்கு வளர்ச்சி பெற்று அழகைப் பெறுகின்றன.

டின்பால், புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளுக்குப் பேதி, மலச்சிக்கல், பால் சுக்குதல் போன்ற தொந்தரவுகளும் அலர்ஜி, தோல் நோய்கள், சுவாசக் கோளாறுகள், சிறுநீரகத் தொல்லைகள் நாளடைவில் உண்டாகின்றன.

இயற்கைப் பாலோடு, செயற்கைப் பால் போட்டி போட முடியுமா?

 புட்டிப் பால் கொடுக்கும் நாய்மார்கள் பலர் பால் கொடுக்கும் புட்டியைச் சுத்தமாகக் கழுவி உபயோகிப் பதில்லை. இதனால் நோய்க் கிருமிகள் புகுந்துகொண்டு தொற்று நோய்களை உண்டாக்குகின்றன.

வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தான் நேரப்படி பால்கொடுக்க வசதி இல்லாமல் புட்டிப்பாலைத் தேடி அலைகிறார்கள் தாய்ப்பால் போதவில்லை என்ற காரணம் காட்டிடின்பாலுக்குத் தாவுகிறார்கள்.

இன்னும் சில தாய்மார்கள் தங்கள் உடல் அழகு கெட்டுவிடுவதாகக் கற்பனை செய்து கொண்டு செயற்கைப் பாலுக்குக் கட்சி மாறுகிறார்கள்.

இவையெல்லாம் மனக்குறைபாடுகளே தவிர, தீர்க்கப் படமுடியாத பிரச்சனைகள் அல்ல. ஒரு டாக்டர் சொல்லுகிறார்: பால்புட்டியும், சாராய புட்டியும் ஒன்று என்று, இவற்றால் தீமை வளருகிறதே தவிர நன்மைகள் வளர்வதில்லை.

தாய்ப்பால் கொடுக்கக்கூடாத சில நோய்கள் தூாய்மார்களைத் தாக்கும் போது தற்காலிகமாக இந்தப் பாலை நாடலாம். ஆனால் இதையே நிரந்தரமாக்கிவிடக் கூடாது. நம்பியிருக்கக் கூடாது.

உலகத்தில் தாய்ப்பாலுக்கு நிகராக இன்னொரு பால் எந்த விஞ்ஞானியாலும் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை.

இது ஒன்றே குழந்தைக்கு ஆரோக்கியம் அளிப்பது தாய்ப் பாலா, புட்டிப்பாலா என்ற கேள்விக்குப் பொட்டில் அடித்தது போல் பதில் சொல்லிவிடும்!

Comments

Popular posts from this blog

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்

ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன?

   ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவம் என்பது 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள சிகிச்சைமுறைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். இது லைக் க்யூர்ஸ் லைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒரு ஆரோக்கியமான நபருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு இதே போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம். ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தாவரங்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை மிகக் குறைந்த அளவுகளில் நீர்த்தப்படுகின்றன. ஹோமியோபதியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று தனிப்படுத்தல் ஆகும். ஹோமியோபதிகள் ஒவ்வொரு நபரின் அறிகுறிகளும் தனிப்பட்டவை என்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்கள். எனவே, மருந்துகளை பரிந்துரைக்கும் போது, ஹோமியோபதி நோயாளியின் ஆரோக்கியத்தின் உடல் அறிகுறிகளை மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மன அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். சில விமர்சகர்கள் ஹோமியோபதி மருந்துகள் அவற்றின் மிகவும