Skip to main content

Google ads

கண் நோய் குணமாக கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் - தமிழ் சித்த மருத்துவம்

 குழந்தைப் பருவத்தில் கண்களைப் பாதிக்கும் நோய்கள் பல. இவற்றுள் கண் சூட்டு நோய் என்று சொல்லப்படும் (Conjunctivitis) கன்ஜங்டிவிடிஸ் என்பது ஒன்று.

இது ஒரு தொற்றுநோய். குழந்தைகள் நெருங்கிப் பழகி விளையாடும்போது இந்த நோய் மற்ற குழந்தைகளுக்குப் பரவுகிறது.

கண் சூட்டு நோய் விஷக் கிருமிகளால் உண்டாகிறது. விஷக் கிருமிகள் காற்றில் பறந்து வந்து கண்ணில் ஒட்டிக்கொள்கின்றன. ஒரு மெல்லிய சவ்வு விழி வெண்படத்லத்தையும் இமைகளின் உட் பகுதியையும் மூடிக்கொண்டிருக்கிறது.

கண் நோய் குணமாக


 இந்த சவ்வு விஷக் கிருமிகளால் தாக்கப்படும் போது சவ்வு வீக்கம் அடைகிறது. கண்களில் எரிச்சல் உண்டாகிறது. இமைகள் சிவந்து தடித்துவிடுகின்றன. கண்ணிலிருந்து ஒருவித்த திரவம் வெளிவருகிறது. இது மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதைப் பீளை என்றும் சொல்லுவார்கள். 

கண் இந்த நோயால் பாதிக்கப்படும் போது கண் கூசும். வெளிச்சத்தைப் பார்க்க முடியாது. இதைக் கவனிக்காவிட்டால் விழி வெண் படலத்தில் புண் உண்டாகும். பார்வைகூடப பாதிக்கும்.

இந்த நோயை ட்ரக்கோமா என்றும், இமை இணைப்படல் நோய் என்றும் சொல்லுவார்கள். குறிப்பாகக் குழந்தைகளை இந்த நோய் தாக்குவதால் கண் பார்வை கொஞ்சங் கொஞ்சமாக மங்கிக் கடைசியில் பார்வைக் குருடும் ஏற்படலாம் என்று கண் டாக்டர்கள் சொல்லுகிறார்கள். விழி வெண்படலத்தில் ஒளி ஊடுருவாமல் போகலாம். அப்போது கண் பார்வை கடுமையாகப் பாதிக்கப் படுவதாகச் சொல்லுகிறார்கள்.

இந்த நோய் திடீரென்று கண்களைத் தாக்குவதால் இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என எதையும் செய்யமுடியாது. சுமார் ஆறு மணி நேரத்தில் இந்த நோய் தீவிரமடைகிறது. கண் சூட்டு நோய் வந்தால் சுமார் ஏழு மணி நேரம் வரை நீடிக்கும். பிறகு குணமாகும் என்று கூறுகிறார்கள். உடனே கவனித்துக் கண் சிகிச்சை செய்து கொண்டால் விரைவில் குணமாகும்.

கன்ஜங்டிவிடிஸ் நோய் கிருமிகளால் உண்டாவதால் சல்பா மருந்துகளும், வாக்ஸின் மருந்துகளும், பென்சிலின் மருந்துகளும் இதற்குப் போட்டுக் குணப்படுத்துகிறார்கள்.

கொசுக்கள், ஈக்கள் இந்தக் கண் நோய்க் கிருமிகளைக் கொண்டுவந்து கண்ணில் விட்டுவிடுகின்றன. இதனால் இமை ஓரத்தில் விளக்கெண்ணெய் தடவுகிறார்கள். கொசுக்களோ அல்லது ஈக்களோ நெருங்குவதில்லை.

கண் நோயால் பாதிக்கப்பட்வர்களே இந்த நோயை அதிகமாகப் பரப்பிவருகிறார்கள். இவர்களின் விரல் ஓரங்களில் ஒட்டிக்கொண்டிருக்கும்.

 விஷக் கிருமிகள் மற்றவர்களைத் தொடும்போதும், இவர்கள் உபயோகிக்கும் கைக்குட்டை, துண்டு, பிற பொருட்களை மற்றவர்கள் உபயோகிக்கும்போதும் விரைவில் இந்த நோய் பரவிகிறது.

தூசு, புகை, அசுத்த நீர் இந்த நோயைப் பரப்புவதால் சுற்றுப் புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருக்க வேண்டும்.

கண் நோய் குணமாக

 இதன் மூலம் மற்ற பிள்ளைகளுக்கு நாம் நன்மை செய்தவர்களாவோம். ஒளிபட்டுக் கண் கூகவதால் கூலிங் கிளாஸ் போட்டுக் கொள்வது நல்லது. கண் மிகுதியான வெளிச்சத்தால் தாக்கப்படாமல் இது தடுக்கிறது.

கண்களைக் குளிர்ந்த நீரில் கழுவி வரவேண்டும். அதுவும் சுத்தமான நீரினால் கழுவவேண்டும். கண்ணிலிருந்து வரும் பீளையைத் துடைக்க ஒரு தனித் துணியை கையில் வைத்துக் கொள்வது நல்லது.

 மஞ்சள் ஒரு கிருமிநாசினி. எனவே மஞ்சளை அரைத்து அந்தத் தண்ணீரில் ஒரு வெள்ளைத் துணியை நனைத்துக் காற்றில் உலரவைத்துப் பிறகு அதையே கைக்குட்டை போல் உபயோகிக்கலாம். கண்ணிலிருந்து வரும் திரவத்தைக் கண்ட கண்ட துணிகளால் துடைக்கக் கூடாது. 

ஒரே துணியை, சுத்தமான துணியை மட்டும் உபயோகிக்க வேண்டும். கண் நோய் வந்திருக்கும் போது கண்ணுக்கு வேலை கொடுக்கக் கூடாது. முதலில் படிப்பதை நிறுத்த வேண்டும்.

நம் கண்களுக்கு எந்தப் பாதிப்பு ஏற்பட்டாலும் உடனே கண் டாக்டரிடம் கண்களைச் சோதித்துக் கொள்வது நல்லது. இதன் மூலம் கிருமிகளால் நோய் தீவிரம் அடையாமல் ஓரளவுக்கு கண்களைக் காப்பாற்றலாம். கண் நோய் என்றால் மிகவும் கருத்தாக இருக்கவேண்டும்.

Comments

Popular posts from this blog

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்

ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன?

   ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவம் என்பது 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள சிகிச்சைமுறைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். இது லைக் க்யூர்ஸ் லைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒரு ஆரோக்கியமான நபருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு இதே போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம். ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தாவரங்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை மிகக் குறைந்த அளவுகளில் நீர்த்தப்படுகின்றன. ஹோமியோபதியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று தனிப்படுத்தல் ஆகும். ஹோமியோபதிகள் ஒவ்வொரு நபரின் அறிகுறிகளும் தனிப்பட்டவை என்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்கள். எனவே, மருந்துகளை பரிந்துரைக்கும் போது, ஹோமியோபதி நோயாளியின் ஆரோக்கியத்தின் உடல் அறிகுறிகளை மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மன அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். சில விமர்சகர்கள் ஹோமியோபதி மருந்துகள் அவற்றின் மிகவும