Skip to main content

Google ads

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை 

✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.

✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும்.

✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு.

✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும்.

✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள்.

✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள். 

✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை.

✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம்.

✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம்.

✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்புமின் சிறுநீரோடு வெளியேறுவதால் இந்தக் கோளாறு ஏற்படுவதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஊது காமாலை நோய்

✷இது உடம்புக்குத் தேவையான புரதச்சத்து.இந்தச் சத்து உடம்பில் ஒட்டாமல் வெளியேறுவதால் உடம்பு வீங்குகிறது. இதனால் இருதயத் துடிப்பும் பாதிக்கிறது.

✷முறைப்படி சிகிச்சை செய்து கொள்ளாவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று டாக்டர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.

✷மஞ்சள் காமாலை நோய் கல்லீரலில் ஏற்படும் கெடுதலால் உண்டாகிறது. ஊது காமாலை சிறுநீர்ப் பிரித்திகளில் ஏற்படும் கோளாறுகளால் உண்டாகிறது. 

✷இதனால் இது வேறு நோய் கல்லீரலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. இந்த நோயை அறியச் சிறுநீரைச் சோதனை செய்தால் போதும். 

✷அல்புமின் பால் போல் சிறுநீருடன் கலந்து வெளியேறுவது தெரியும். உடனே இதைத் தடுத்து நிறுத்த மருத்துவச் சிகிச்சை செய்துகொண்டால் சீக்கிரம் குணப்படுத்தலாம்.

✷பொதுவாக, இந்த நோய் வரக் காரணம் உடம்பி அதிக அளவில் உப்புச் சேர்த்துவிடுவதுதான் என்கிறார்கள் டாக்டர்கள்.

✷உப்பை உணவில் குறைக்க வேண்டும். இது மிக முக்கியம். அதிமுக்கியம்.

✷சிறுமிகளுக்கும் சிறுவர்களுக்கும் இந்த நோய் வந்தால் வயிறு சுரந்து பேதியாகும். உடல் வெளுத்து முகம் ஊதி உடம்பில் வலி உண்டாகலாம்.

✷இதற்குச் சித்த வைத்தியத்தில் நிறைய மருந்துகள் சொல்லப்பட்டிருக்கின்றன.

✷மஞ்சள் கரிலாங்கண்ணி இலை, அருகம் புல், மிளகு,துளசி சேர்த்து அரைத்துக் கொடுக்கிறார்கள்.

✷காட்டாமணக்கு இலையை இடித்துச் சாறு பிழிந்து கொடுக்கிறார்கள். இதற்கு உப்பும் புளியும் சாப்பிடக் கூடாது என்று பத்தியம் உண்டு. உப்பிலாக் கஞ்சிதான் இந்த நோயாளிகளுக்கு ஆகாரம்.

✷சீமை அத்திப்பழத்தைப் பசும் பாலில் காய்ச்சி சர்க்கரை போட்டுக் கொடுக்கலாம்.

✷பதநீர் கொடுக்கலாம். காப்பி டீ கொடுக்கக்கூடாது.

✷நோய் என்று தெரிந்ததும் உடனே சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். காலம் தாழ்த்தக் கூடாது.

✷குழந்தைகளுக்கும், கர்ப்பமான பெண்களுக்கும் இந்த நோய் வந்துவிட்டால் மிகவும் கவனமாகச் சிகிச்சை தரப்படவேண்டும்.

✷உப்பைக் குறைத்தால் இந்த நோயை ஊதி அணைத்து விடலாம்.

✷ஊது காமாலையைக் கண்டு அச்சப்படாதீர்கள்.

✷சிறுநீரகம் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொண்டால் ஊது காமாலையை ஒழித்து வெற்றி மாலை சூடலாம்!

Comments

Popular posts from this blog

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந

ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன?

   ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவம் என்பது 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள சிகிச்சைமுறைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். இது லைக் க்யூர்ஸ் லைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒரு ஆரோக்கியமான நபருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு இதே போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம். ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தாவரங்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை மிகக் குறைந்த அளவுகளில் நீர்த்தப்படுகின்றன. ஹோமியோபதியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று தனிப்படுத்தல் ஆகும். ஹோமியோபதிகள் ஒவ்வொரு நபரின் அறிகுறிகளும் தனிப்பட்டவை என்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்கள். எனவே, மருந்துகளை பரிந்துரைக்கும் போது, ஹோமியோபதி நோயாளியின் ஆரோக்கியத்தின் உடல் அறிகுறிகளை மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மன அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். சில விமர்சகர்கள் ஹோமியோபதி மருந்துகள் அவற்றின் மிகவும