Skip to main content

Google ads

அலர்ஜி கொப்புளங்கள் என்றால் என்ன? அதை குணப்படுத்தும் வழிமுறைகள் என்னென்ன?

 குழந்தைகளுக்கு எவ்விதக் காரணமும் இல்லாமல் உடம்பில் கொப்புளங்கள் உண்டாவதைப் பார்க்கிறோம். இவை எப்படி வந்தன என்பதை அறிய முடிவதில்லை.

டாக்டரிடம் காட்டினால் இது ஒரு வகை அவர்ஜியினால் உண்டாகிறது என்று சொல்லுகிறார். இதற்கு அர்டிகாரியா அழைக்கிறார்கள். என்று மருத்துவப் பெயரிட்டு ஏற்றுக் கொள்ளாத ஒரு பொருள் உடம்பில் சேர்வதால் இது உண்டாகிறது. இதை அலெர்ஜன்கள் என்றும் அழைக்கிறார்கள்.

உணவு வகைகளில் சில கொப்புளங்களை காற்றில் மிதந்து வரும் மகரந்தப் பொடிகளும் கொப்புளங்களை உண்டாக்கலாம்.

அல்லது குழந்தைகள் நோய் வாய்ப் படும் போது கொடுக்கப்படும் மருந்து வகைகளும் காரணமாக இருக்கலாம். அல்லது வேறு ஏதோ ஒன்றாகவும் இருக்கலாம். இவை உடம்பில் புகுந்து அலர்ஜி விளைவுகளை உண்டாக்கிக் கொப்புளங்களாக வெடிக்கும்.

பொதுவாகக் குழந்தைகளையே அலர்ஜி அதிகமாகப் பாதிக்கிறது.

யுர்டிகாரியா கொப்புளங்கள் என்று ஒரு வகை உண்டு. இது மருந்துகளால் குழந்தைகளின் தோலில் சிவப்பு இளஞ். சிவப்புக் கலந்த புள்ளிகள் முதலில் தோன்றும். பிறகு இதுவே சிறுசிறு கொப்புளங்களாக மாறும். ஓரிடத்தில் தோன்றும். பிறகு வற்றிவிடும். இன்னோர் இடத்தில் தோன்றும். கொப்புளம் வெடித்ததும் அரிப்பு உண்டாகும். இரவில் இந்த அரிப்பு அதிகமாகித் தொந்தரவு கொடுக்கும்.


உதடுகள், கண்ணைச் சுற்றியுள்ள இடங்கள் ஆகிய பகுதிகளில் தோன்றினால் நீர் கோர்த்துக் கொள்ளும். குழந்தைகள் சொரிந்து விடும்போது மற்ற இடங்களுக்கும் பரவும்.

மருந்துகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் போது டாக்டர் சொல்லும் அளவோடு கொடுக்க வேண்டும். அளவுக்கு அதிகமாகக் கொடுப்பதால், யுர்டிகாரியா என்ற நோய் தோன்றுவதாகக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

தோலின்மீது பூசப்படும் மருந்தை அளவுக்கு அதிமாகப் பூசினாலும் யுர்டிகாரியா உண்டாகலாம்.

குழந்தைக்குக் கொடுக்கப்படும் பால்கூட இந்த நோயை உண்டுபண்ணும் என்று டாக்டர்கள் சொல்லுகிறார்கள்.

யுர்டிகாரியாவைத் தோற்றுவிக்கும் அலர்ஜென்கள் எவை என்று கண்டுபிடிப்பது கஷ்டம் என்றாலும், குழந்தை புதிதாக என்ன சாப்பிட்டது என்று தெரிந்தால் அதை இன்னொரு முறை கொடுக்கக் கூடாது.

குழந்தைகள் எதைக் கண்டாலும் எடுத்து வாயில் வைக்கும் சுபாவம் உள்ளவை. ஆகவே அலர்ஜி நோய்களுக்குக் குழந்தைகள் அதிகமாக இலக்காவதைப் பார்க்கிறோம்.

குழந்தை உணவு வகைகள் பல இப்போது புதிது புதிதாக மார்க்கெட்டுக்கு வந்து வியாபாரம் ஆகி கிக் கொண்டிருக்கின்றன.

எந்த உணவு குழந்தைகளுக்குப் பொருந்தும் உணவு என்பதை அனுபவப்பட்ட டாக்டர்கள் சொல்லி விடுவார்கள். அந்த உணவை மட்டுமே கொடுக்க வேண்டும்.

அலெர்ஜி நோய்களைக் கண்டுபிடிக்க, பெரிய நகரங்களில் உள்ள மருத்துவ மனைகளில் தனிப்பிரிவை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சரி, காற்றில் பரவும் அலர்ஜென்களைக் கண்டுபிடித்து அதற்கு மருத்துவம் செய்கிறார்கள்.

உடலைப் பாதிக்கும் சாதாரணக் கொப்புளங்கள் என்றால் எத்தனையோ மருந்துகள் இருக்கின்றன.

உடம்பில் தடிப்போ, கொப்புளமோ தோன்றினால் சோறு வடித்த கஞ்சியைச் சிறிது உப்புக் கலந்து உடம்பில் தேய்த்தாலே போதும், கொப்புளம் வடிந்துவிடும்.

இது தவிர, சீரகத்தைப் பொடியாக்கித் தேங்காய்ப் பாலில் கலந்து கொப்புளத்தின் மீது தடவினால் அது உடைந்து ஆறிவிடும்.

ஆனால் இது அலர்ஜியினால் ஏற்பட்ட கொப்புளமாக் இருப்பதால் அலர்ஜிக்குக் காரணம் என்ன என்று கண்டு பிடித்து அதை நீக்கினால் கொப்புளம் உடலில் பரவாது.

காரணத்தைக் கண்டுபிடிக்காமல் மருந்துகளைப் பூசுவதால் நோய் திரும்பத்திரும்ப வந்துகொண்டே இருக்கும். சாதாரண குணமாகாமல் அர்டிகாரியாவோ,அல்லது யுர்டிகாரியாவோ,எந்த வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும் இதற்கு அடிப்படை அலர்ஜி என்பதால் நீங்களே சொந்தமாக வைத்தியம் செய்து கொண்டு காலத்தைக் கடத்த வேண்டாம்.

குழந்தை வைத்தியரை அணுகிப் அதற்குப் பரிகாரம் தேடுங்கள். இதுதான் இம்மாதிரி நோய்களுக்குச் சரியான அணுகுமுறை.

பாவம் குழந்தைகள். அவை இரவிலும் பகலிலும் சொரிந்துகொண்டு அவதிப்படும்படி விட்டுவிடாதீர்கள்.

Comments

Popular posts from this blog

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்

ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன?

   ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவம் என்பது 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள சிகிச்சைமுறைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். இது லைக் க்யூர்ஸ் லைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒரு ஆரோக்கியமான நபருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு இதே போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம். ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தாவரங்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை மிகக் குறைந்த அளவுகளில் நீர்த்தப்படுகின்றன. ஹோமியோபதியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று தனிப்படுத்தல் ஆகும். ஹோமியோபதிகள் ஒவ்வொரு நபரின் அறிகுறிகளும் தனிப்பட்டவை என்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்கள். எனவே, மருந்துகளை பரிந்துரைக்கும் போது, ஹோமியோபதி நோயாளியின் ஆரோக்கியத்தின் உடல் அறிகுறிகளை மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மன அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். சில விமர்சகர்கள் ஹோமியோபதி மருந்துகள் அவற்றின் மிகவும