Skip to main content

Google ads

மலத்தில் ரத்தம் வருவதை தடுப்பது எப்படி?அறியாத தகவல்கள்- Medical Tamizha

  ✷கழிவுப் பொருள்களோடு சில வேளைகளில் இரத்தமும் வெளியேறுவது உண்டு. சாதாரணமாகச் சிரமத்துடன் மலம் கழிக்கும் போது சில துளிகள் இரத்தம் வரலாம்.

 ✷இதுவே தொடர்ந்து நடந்தால் உடலுக்கு மட்டுமல்ல,

 ✷உயிருக்கும் ஆபத்து. மலத்தில் இரத்தம் வருவதற்குப் பல காரணங்கள் உண்டு. இதற்குக் குடல் நோய்களும் ஒரு காரணம்.

 ✷குடல் நோய்களில் அமீபியாசிஸ் என்று சொல்லப்படும் அமீபா கிருமிகளால் உண்டாகும் நோயும்.

 ✷ஷீகெல்லா என்று சொல்லப்படும் கிருமிகளால் உண்டாகும் நோயும், மலம் கழிக்கும்போது இரத்தம் வரக் காரணமாக இருக்கின்றன.

 ✷இந்த நோயாளிகளில் ஒரு நாளைக்குப் பல தடவை மலம் கழிப்பார்கள். மலத்தில் சளியும் இரத்தமும் வரும். மலத்தை சோதித்துப் பார்த்தால் அமீபா கிருமிகளும் ஷீகெல்லா கிருமிகளும் காணப்படும். 

 ✷அமீபா கிருமிகளால் உண்டாகும் மலப் போக்கில் இரத்தம் குறைவாகவும் மலம்; அதிகமாகவும் வெளியேறும். துர்நாற்றம் கடுமையாக இருக்கும்.


மலத்தில் ரத்தம் வருதல்


 ✷அமீபா கிருமியால் இன்னோர் ஆபத்தும் உண்டு. இந்தக் கிருமி கல்லீரலுக்குப் போய் அந்த இடத்தில் புண்ணை உண்டாக்கும். இதனால் பலவிதக் கெடுதல்கள் உண்டாகின்றன.

 ✷இவை தவிர. இரைப்பையில் ஏற்படும் சில நோய்களும் மலத்தோடு இரத்தம் வெளியேறக் காரணமாக அமைந்துவிடுகின்றன. 

 ✷இரப்பையில் புண்ணும், இரைப்பைப் புற்றுநோயும் இதனால் உண்டாகலாம். இதனால் மலத்தில் இரத்தம் விழுவதோடு வாந்தியிலும் இரத்தம் வரும்.

 ✷அலர்ஜி நோய்களும் இரத்தம் வரக் காரணம் என்கிறார்கள் டாக்டர்கள். இரைப்பை நோய்களுக்கு இரையாகிறவர்கள் 20 வயது முதல் 40 வயதுக்காரர்கள்தாம் அதிகம்.

 ✷குடல் புண் அழற்சி ஏற்படும்போது வயிற்றில் வலி உண்டாகும். மலத்தில் இரத்தம் வரும். இது அறிகுறி. உடல் எடை குறையும். உடல் இளைத்துப் போய்ச் சோகை நோயும் உண்டாகலாம்.

 ✷மலத்தில் இரத்தம் வருவதற்கு மூலநோய் ஒரு முக்கிய மான காரணம். இதை இரத்த மூலம் என்று சொல்லுவார்கள். கல்லீரலிலுள்ள இரத்த நாளங்கள் சரிவர வேலை செய்யா விட்டால் ஆசன வாயில் உள்ள இரத்த நாளங்களில் தேக்கம் ஏற்பட்டு அதுவே மூல நோயாகி மலத்தில் இரத்தம் விழக் காரணமாக இருக்கிறது.

 ✷இதற்கு முன்னே எல்லாம் ஆப்ரேஷன் செய்துதான் நோயைக் குணப்படுத்தினார்கள். இப்போது அவசியம் ஏற்பட்டால் மட்டுமே ஆப்ரேஷன் செய்கிறார்கள். மருந்துகள் மூலமாகவே குணப்படுத்துகிறார்கள்.

 ✷சித்த ஆயுர்வேத வைத்தியத்தில் மூல நோய்க்குப் பல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. கீரை, பழங்கள் சாப்பிடுவதால் இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம். தண்ணீர் அதிகமாகக் குடிப்பதும் நல்லது.

 ✷கல்லீரல் சம்பந்தமான கோளாறுகளுக்கு வைட்டமின்-சி. சத்துள்ள உணவுகளை அதிகமாகச் சாப்பிட வேண்டும்.

 ✷பி.காம் பிளக்ஸ் வைட்டமின் பி-12 இதற்கு மருந்து. மலத்தில் இரத்தம் விழுந்தால் உடனே மலப் பரிசோதனை செய்து அது எந்தக் கிருமித் தொற்றால் உண்டானது என்று சோதித்து அறிந்துகொள்ள வேண்டும். ஈரல் சம்பந்தமாக இருந்தால் இரத்தப் பரிசோதனை செய்து பார்த்துவிட வேண்டும். 

 ✷இப்போது நவீன மருத்துவக்கருவிகள் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. எது சம்பந்தமான நோய் என்று தெள்ளத் தெளிவாகக் கண்டுபிடித்துச் சிகிச்சை அளிக்கிறார்கள்.

 ✷பிராக்டாஸ்கோபி, பேரியம், எனிமா, எக்ஸ்-ரே படம் இவற்றின் மூலம் நோய் எந்தப் பகுதியில் ஆதிக்கம் செலுத்துகிறது என்று புரிந்துவிடும்.

 ✷கல்லீரல் பாதிப்புக்கு மதுவும் ஒரு காரணம் என்று டாக்டர்கள் சொல்லுகிறார்கள்.

 ✷சுத்தமான நீர், சுத்தமாண உணவு, இந்த இரண்டும் குடல் சம்பந்தமான நோய்களை வரவிடாமல் தடுக்கின்றன.

 ✷இதில் கவனம் செலுத்தினால் அமீபா, ஷீகெல்லா கிருமிகளை விரட்டியடிக்கலாம்.

 ✷உடம்புக்குப் பாதுகாப்பான இரத்தம் உடம்பில்தான் இருக்க வேண்டும். உடம்பை விட்டுக் கழிவுப் பொருளாக வெளியே வரக்கூடாது.

 ✷மலத்தில் இரத்தம் என்றால் மனத்தில் பயம் ஏற்பட வேண்டும். அப்போதுதான் பரிகாரம் தேடமுடியும் அலட்சியப் போக்கு ஆபத்தை விளைவிக்கும்.

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

இளம் நரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய தீர்வு

இளநரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய இயற்கை தீர்வு ✍️ தேவையான மூலப்பொருட்கள்: 1.மருதாணி இலை - 1 கைப்பிடி 2.கரிசலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி 3.கறிவேப்பிலை - 1 கைப்பிடி 4.எலுமிச்சை - 1 பழம் ✍️ செய்முறை : 1 - 3 குறிப்பிட்ட இலையை தண்ணீர் விட்ட மைய்ய அரைத்து கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து அரைத்து கொள்ளவும் ✍️ பயன்படுத்தும் முறை: வாரம் ஒரு முறை தலை முடியில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை சீகக்காய் அல்லது உங்கள் தலைக்கு பொருந்தும் ஷாம்பூ பயன்படுத்துங்கள் ✍️ கடைபிடிக்க வேண்டியவை: 1. இளநரை மறைய குறைந்தது 10 வாரம் விடாது பயன்படுத்தினால் உறுதியான பலன் கிடைக்கும் 2.அடிக்கடி எண்ணெய் மற்றும் ஷாம்பூ மாற்ற வேண்டாம் 3.இந்த முடியில் பூசும் பொழுது முடியில் எண்ணெய் பசை இருந்தால் சுத்தமாக பலன் கொடுக்காது, தேவையான நேரத்தில் மட்டும் தயார் செய்து தலையில் தடவுங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்து காய்ந்த கலவை பலன் கொடுக்காது 4.முடிந்த அளவு அந்த 30 நிமிடம் காய்வதும் வெயிலில் காய வைத்தால் இன்னும் மிக நல்ல பலனை பெறலாம் 5.இளநரை என்பது 20-40 வயதிருனருக்கு மட்டுமே பலன் கொடுக்கும் அதற்கு மேல் ...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...