Skip to main content

Google ads

மருந்தும் விஷம் ஆகலாம்! உஷாராக இருங்கள்!அறியாத தகவல்கள்- Medical Tamizha

 ஒரு நோயைக் குணமாக்கும் ஒரு மருந்து, நோயாளிகளின் உடலில் பதுங்கி இருக்கும் நோயைக் காலப் போக்கில் தூண்டிவிடும்.

Drug என்றாலே விஷம் கலந்த மருந்து என்று மருத்துவ அகராதி கூறுகிறது. சில நோய்க் கிருமிகளைக் கொல்ல மருந்தில் விஷம் ஒரு குறிப்பிட்ட அளவு சேர்க்கப் இந்த பட்டிருக்கிறது.

சில மருந்து பாட்டில்களில் விஷம் என்று குறிக்கப்பட்டிருப்பதையும் பார்க்கிறோம். மருந்துகளை டாக்டர்களின் சிபாரிசுச் சீட்டு இல்லாமல் சில மருந்துக் கடைகளில் கொடுக்கமாட்டார்கள். 

சில மருந்துகளை டாக்டர்கள் அளவோடு சாப்பிடும்படி ஆலோசனை கூறுவார்கள். காரணம், இந்த மருந்துகளில் விஷம் கலக்கப்பட்டிருக்கும். 

குறிப்பிட்ட தினங்கள் வரை மட்டுமே சில மருந்துகளை டாக்டர்கள் நோயாளிக்குக் கொடுக்கும் படி கட்டளை போடுவார்கள். காரணம், குறிப்பிட்ட தினங்களுக்கு மேல் தொடர்ந்து சாப்பிட்டால் மருந்து விஷமாகிவிடுகிறது.



ஆனால் சில நோயாளிகள் டாக்டர் சொல்லும் அறிவுரைகளை,ஆலோசனைகளைக் கேட்பதில்லை. நோய் குணமாகிச் சீக்கிரம் விடுதலை பெறலாம் என்கிற ஆசையில் அதிகமாக,அளவுக்கு மீறிச் சாப்பிட்டு விடுகிறார்கள். 

ஒரு மருந்து, தலைவலி, காய்ச்சல், உடம்புவலிகள் குணமாகடாக்டர்களால் கொடுக்கப்படுகிறது. இதுபோலவே தலைவலி மருந்துக் கடைகளில் மட்டுமின்றிப் பெட்டிக் கடைகளிலும் விற்கப்படுகிறது.

இந்த மருந்தை அளவோடு சாப்பிடவேண்டும். அளவுக்கு மீறிச் சாப்பிட்டால் அடிக்கடி சாப்பிட்டால் வயிற்றோட்டம் வாந்தி உண்டாகும். அல்சர் நோயையும் உண்டாக்கும். 

இரத்தம் உறையும் தன்மை நீக்கிவிடும். ஹீமோபீலியா என்ற இரத்தக் கசிவு நோயை உண்டாக்கும். தவிர, நாளடைவில் இருதய பலகீனமும் உண்டாக்கும். காதுகள்கூட மந்தமடைவதாக டாக்டர்கள் சொல்லுகிறார்கள்.

உயர் இரத்த அழுத்தத்திற்குக் கொடுக்கப்படும் ஒரு மருந்து அதிக அளவில், அடிக்கடி கொடுக்கப்பட்டு வந்தால் மனநோய் உண்டாகும். விரல் நடுக்கம் கொடுக்கும். வலிப்பு நோய் உண்டாகும்.சில சமயங்களில் சிலநோயாளிகளுக்குக் கொலை வெறியையும் தூண்டி விடும்.

நீரிழிவு நோய்களுக்குக் கொடுக்கப்படும் சில மருந்துகள் பிற்காலத்தில் டி.பி நோயை உண்டாக்குகின்றன என்று அனுபவமிக்க டாக்டர்கள் சொல்லுகிறார்கள்.

இது போலவே இருப்புச்சத்து நிறைந்த சில மருந்துகள் நாளடைவில் வேறு சில கோளாறுகளைத் தூண்டிவிட்டுவிடுகின்றன.

உடல் பருமனைக் குறைக்கக் கொடுக்கப்படும் சில மருந்துகள் சில விபரீத நோய்களை உண்டாக்கி விடுகின்றனவாம். வலி நிவாரணி என்று சொல்லப்படும் ஒரு தூக்க மருந்து இருதய நோயாளிகளுக்கும், பிரசவ நேரப் பெண்களுக்கும் கொடுக்கப்படுகிறது.

இந்த மருந்தை தொடர்ந்து அளவுக்கு மீறிச் சாப்பிட்டால் வயிற்றிலிருக்கும் குழந்தையின் மூளை பாதிக்கப்படுகிறது என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். இது போலவே பிரசவ வலி நிவாரணி மருந்து ஒன்று பிறக்கும் குழந்தைகளுக்குக் கால் இல்லாமல் கையில்லாமல் பிறக்கும் ஆபத்தை உண்டாக்குகிறது.

மாணவர்கள் இரவில் நீண்ட நேரம் தூக்கமில்லாமல் படிப்பதற்குச் சாப்பிடும் மருந்துகள் காலப் போக்கில் அவர்களுடைய சுபாவங்களையே மாற்றி மன நோய்களைத் தூண்டிவிடுகின்றன என்று மனவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சிறுநீரகக் கோளாறுகளுக்குக் கொடுக்கப்படும் சில மருந்துகள் வாந்தி, உடல் வலி, இரத்த ஒழுக்கு போன்ற நோய்களைத் தோற்றுவிக்கின்றன. சில சல்பா மருந்துகள் சிறுநீரகத்தைத் தாக்குகின்றன.

சரும நோய்களை உண்டாக்குகின்றன. டி.பி நோய்களுக்குத் தரப்படும் சிறந்த மருந்து ஒன்றைத் தொடர்ந்து சாப்பிடுகிறவர்களுக்குக் காது செவிடாகும்.

ஆங்கில மருந்துகள் பல, சிலருடைய உடலில் பயங்கர விளைவுகளை உண்டாக்குவதால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 மருந்தும் சில வேளைகளில், சில மனிதர்களுக்கு விஷமாகும் என்பதால் அளவோடு சாப்பிட வேண்டும். டாக்டரின் ஆலோசனைகளுடன் மருந்து சாப்பிட வேண்டும். இதனால் மருந்தே கூடாது என்பது என் நோக்கமல்ல!

Comments

Popular posts from this blog

இளம் நரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய தீர்வு

இளநரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய இயற்கை தீர்வு ✍️ தேவையான மூலப்பொருட்கள்: 1.மருதாணி இலை - 1 கைப்பிடி 2.கரிசலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி 3.கறிவேப்பிலை - 1 கைப்பிடி 4.எலுமிச்சை - 1 பழம் ✍️ செய்முறை : 1 - 3 குறிப்பிட்ட இலையை தண்ணீர் விட்ட மைய்ய அரைத்து கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து அரைத்து கொள்ளவும் ✍️ பயன்படுத்தும் முறை: வாரம் ஒரு முறை தலை முடியில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை சீகக்காய் அல்லது உங்கள் தலைக்கு பொருந்தும் ஷாம்பூ பயன்படுத்துங்கள் ✍️ கடைபிடிக்க வேண்டியவை: 1. இளநரை மறைய குறைந்தது 10 வாரம் விடாது பயன்படுத்தினால் உறுதியான பலன் கிடைக்கும் 2.அடிக்கடி எண்ணெய் மற்றும் ஷாம்பூ மாற்ற வேண்டாம் 3.இந்த முடியில் பூசும் பொழுது முடியில் எண்ணெய் பசை இருந்தால் சுத்தமாக பலன் கொடுக்காது, தேவையான நேரத்தில் மட்டும் தயார் செய்து தலையில் தடவுங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்து காய்ந்த கலவை பலன் கொடுக்காது 4.முடிந்த அளவு அந்த 30 நிமிடம் காய்வதும் வெயிலில் காய வைத்தால் இன்னும் மிக நல்ல பலனை பெறலாம் 5.இளநரை என்பது 20-40 வயதிருனருக்கு மட்டுமே பலன் கொடுக்கும் அதற்கு மேல் ...

குழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நேரத்தில் கொடுக்க வேண்டிய உணவு முறைகளும்

குழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நேரத்தில் கொடுக்க வேண்டிய உணவு முறைகளும் 1. முதல் சில மாதங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி & வயிற்றுப்போக்கு (Vomiting & Diarrhoea): Vomiting & Diarrhoea குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களில் முக்கியமானவை. முதல் Step குழந்தைக்கு கொதிக்க வைத்து ஆறவைத்த தண்ணீரைச் சிறிது கொடுக்கலாம். (or) feed of பால் கொடுப்பதை நிறுத்தலாம். பால் கொடுப்பதற்கு பதிலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளதை செய்து கொடுக்கலாம். பாலைக் கொதிக்க வைத்து அதில் சிறிது எலுமிச்சம் பழச்சாற்றை விடவும். பாலிலிருந்து தண்ணீர் தனியாகவும் Paneer தனியாகவும் பிரிந்து விடும். இதை வடிகட்டி அந்த நீரை மட்டும் இடைவெளி விட்டு கொடுத்து வரலாம். (or)  (i) 200ml தண்ணீர் (ii) 2 tsp சர்க்கரை  (iii) 1 tsp உப்பு  (iv) அரைமூடி எலுமிச்சம் பழச்சாறு (v) ½ tsp Soad bicarb (cooking soda) இவற்றைக் கலந்து அடிக்கடி கொடுத்து வரலாம். குழந்தை dehydration ஆகாமல் தடுப்பதற்கு இது மிகவும் உதவும். குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் பாத்திரங்களை மிகவும் சுத்தமாக உபயோகப்படுத்தல் அவசியம். (2)...

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந...