Skip to main content

Google ads

மருந்தும் விஷம் ஆகலாம்! உஷாராக இருங்கள்!அறியாத தகவல்கள்- Medical Tamizha

 ஒரு நோயைக் குணமாக்கும் ஒரு மருந்து, நோயாளிகளின் உடலில் பதுங்கி இருக்கும் நோயைக் காலப் போக்கில் தூண்டிவிடும்.

Drug என்றாலே விஷம் கலந்த மருந்து என்று மருத்துவ அகராதி கூறுகிறது. சில நோய்க் கிருமிகளைக் கொல்ல மருந்தில் விஷம் ஒரு குறிப்பிட்ட அளவு சேர்க்கப் இந்த பட்டிருக்கிறது.

சில மருந்து பாட்டில்களில் விஷம் என்று குறிக்கப்பட்டிருப்பதையும் பார்க்கிறோம். மருந்துகளை டாக்டர்களின் சிபாரிசுச் சீட்டு இல்லாமல் சில மருந்துக் கடைகளில் கொடுக்கமாட்டார்கள். 

சில மருந்துகளை டாக்டர்கள் அளவோடு சாப்பிடும்படி ஆலோசனை கூறுவார்கள். காரணம், இந்த மருந்துகளில் விஷம் கலக்கப்பட்டிருக்கும். 

குறிப்பிட்ட தினங்கள் வரை மட்டுமே சில மருந்துகளை டாக்டர்கள் நோயாளிக்குக் கொடுக்கும் படி கட்டளை போடுவார்கள். காரணம், குறிப்பிட்ட தினங்களுக்கு மேல் தொடர்ந்து சாப்பிட்டால் மருந்து விஷமாகிவிடுகிறது.



ஆனால் சில நோயாளிகள் டாக்டர் சொல்லும் அறிவுரைகளை,ஆலோசனைகளைக் கேட்பதில்லை. நோய் குணமாகிச் சீக்கிரம் விடுதலை பெறலாம் என்கிற ஆசையில் அதிகமாக,அளவுக்கு மீறிச் சாப்பிட்டு விடுகிறார்கள். 

ஒரு மருந்து, தலைவலி, காய்ச்சல், உடம்புவலிகள் குணமாகடாக்டர்களால் கொடுக்கப்படுகிறது. இதுபோலவே தலைவலி மருந்துக் கடைகளில் மட்டுமின்றிப் பெட்டிக் கடைகளிலும் விற்கப்படுகிறது.

இந்த மருந்தை அளவோடு சாப்பிடவேண்டும். அளவுக்கு மீறிச் சாப்பிட்டால் அடிக்கடி சாப்பிட்டால் வயிற்றோட்டம் வாந்தி உண்டாகும். அல்சர் நோயையும் உண்டாக்கும். 

இரத்தம் உறையும் தன்மை நீக்கிவிடும். ஹீமோபீலியா என்ற இரத்தக் கசிவு நோயை உண்டாக்கும். தவிர, நாளடைவில் இருதய பலகீனமும் உண்டாக்கும். காதுகள்கூட மந்தமடைவதாக டாக்டர்கள் சொல்லுகிறார்கள்.

உயர் இரத்த அழுத்தத்திற்குக் கொடுக்கப்படும் ஒரு மருந்து அதிக அளவில், அடிக்கடி கொடுக்கப்பட்டு வந்தால் மனநோய் உண்டாகும். விரல் நடுக்கம் கொடுக்கும். வலிப்பு நோய் உண்டாகும்.சில சமயங்களில் சிலநோயாளிகளுக்குக் கொலை வெறியையும் தூண்டி விடும்.

நீரிழிவு நோய்களுக்குக் கொடுக்கப்படும் சில மருந்துகள் பிற்காலத்தில் டி.பி நோயை உண்டாக்குகின்றன என்று அனுபவமிக்க டாக்டர்கள் சொல்லுகிறார்கள்.

இது போலவே இருப்புச்சத்து நிறைந்த சில மருந்துகள் நாளடைவில் வேறு சில கோளாறுகளைத் தூண்டிவிட்டுவிடுகின்றன.

உடல் பருமனைக் குறைக்கக் கொடுக்கப்படும் சில மருந்துகள் சில விபரீத நோய்களை உண்டாக்கி விடுகின்றனவாம். வலி நிவாரணி என்று சொல்லப்படும் ஒரு தூக்க மருந்து இருதய நோயாளிகளுக்கும், பிரசவ நேரப் பெண்களுக்கும் கொடுக்கப்படுகிறது.

இந்த மருந்தை தொடர்ந்து அளவுக்கு மீறிச் சாப்பிட்டால் வயிற்றிலிருக்கும் குழந்தையின் மூளை பாதிக்கப்படுகிறது என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். இது போலவே பிரசவ வலி நிவாரணி மருந்து ஒன்று பிறக்கும் குழந்தைகளுக்குக் கால் இல்லாமல் கையில்லாமல் பிறக்கும் ஆபத்தை உண்டாக்குகிறது.

மாணவர்கள் இரவில் நீண்ட நேரம் தூக்கமில்லாமல் படிப்பதற்குச் சாப்பிடும் மருந்துகள் காலப் போக்கில் அவர்களுடைய சுபாவங்களையே மாற்றி மன நோய்களைத் தூண்டிவிடுகின்றன என்று மனவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சிறுநீரகக் கோளாறுகளுக்குக் கொடுக்கப்படும் சில மருந்துகள் வாந்தி, உடல் வலி, இரத்த ஒழுக்கு போன்ற நோய்களைத் தோற்றுவிக்கின்றன. சில சல்பா மருந்துகள் சிறுநீரகத்தைத் தாக்குகின்றன.

சரும நோய்களை உண்டாக்குகின்றன. டி.பி நோய்களுக்குத் தரப்படும் சிறந்த மருந்து ஒன்றைத் தொடர்ந்து சாப்பிடுகிறவர்களுக்குக் காது செவிடாகும்.

ஆங்கில மருந்துகள் பல, சிலருடைய உடலில் பயங்கர விளைவுகளை உண்டாக்குவதால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 மருந்தும் சில வேளைகளில், சில மனிதர்களுக்கு விஷமாகும் என்பதால் அளவோடு சாப்பிட வேண்டும். டாக்டரின் ஆலோசனைகளுடன் மருந்து சாப்பிட வேண்டும். இதனால் மருந்தே கூடாது என்பது என் நோக்கமல்ல!

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

ஆசன அரிப்பு பிரச்சனையை சரிசெய்யும் வழிமுறைகள்

 உணவை உண்ணுவதற்கு ஒரு வாயும், உண்ட உணவை வெளியே தள்ளுவதற்கு ஒரு வாயிலும் என இரண்டு அமைப்புக்கள் உடலில் படைக்கப் பட்டிருக்கின்றன. இரண்டும் சுத்தமாக, சுகாதாரத்தோடு இருந்தால் எவ்விதத் தொல்லைகளும் இந்த உடலுக்கு வருவதில்லை. பாதுகாப்புக் குறையும்போது இந்த உறுப்புக்கள் பழுதடைகின்றன. இதனால் சில உபத்திரவங்களும் உண்டாகின்றன. ஆசன வாயில் ஏற்படும் அரிப்பு இவற்றுள் ஒன்று.அரிப்பு என்பது ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. உள் நோயின் அடையாளம். வரப்போகும் ஒரு நோயின் அறிவிப்பு. இதற்குப் பரிகாரம் தேடாவிட்டால் ஒரு நிரந்தரத் தொல்லையாகவும் அமைந்துவிடலாம். ஆசனவாய் அரிப்புக்குப் பல காரணங்கள் உண்டு. குடல் புழுக்கள், பூஞ்சைக் காளான் தொற்றுதல், நரம்புக் கோளாறுகள், அலர்ஜி ஆகியவற்றை இதற்குக் காரணங்களாகச் சொல்லுகிறார்கள். முக்கியமாகச் சொல்லப்படும் காரணங்களுள் அரை குறையாக மலம் கழிப்பதும் ஒன்று. முழுமையாகக் கழிவுப் பொருள்கள் வெளியே தள்ளப் படாமல் தேக்கி வைக்கப்படுவதால் அதனால் உறுத்தல் ஏற்பட்டு அரிப்பு உண்டாகிறது. மலச்சிக்கல், மூலம் (பைல்ஸ்) பௌத்திரம், வயிற்றில் புளிப்பு அதிகமாவதாலும் ஆசனவாய் அரிப்பு ஏற்படுகிறது. சில சம...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...