Skip to main content

Google ads

புற ஊதாக் கதிர்களால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் என்னென்ன?

 விஞ்ஞான வித்தகர்கள் பல நாடுகளின் சூரியக் கதிர்களை ஆராய்ந்தனர். சூரியனின் கதிர்களில் ஏழுவித நிறங்கள் இருப்பதாகக் கண்டுபிடித்தார்கள். ஊதா. அவுரி நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய ஏழு நிறங்கள் இருப்பதைக் கண்டார்கள். இதை ஹீலியோ பயாலஜி என்றும் தமிழில் சூரிய ஒளி உயிரியல் ஆய்வு என்றும் கூறுகிறார்கள்.

உலக நாடுகளின் பிளேக் நோய், காலரா நோய், டி.பி. நோய், இன்புளுயன்சா ஆகிய நோய்கள் பரவி இருந்த கால கட்டங்களை ஆராய்ந்த போது சூரியனில் ஏற்படும் கொந்தளிப்பே இதற்குக் காரணம் என்று உலக நாட்டு விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். தக்க ஆதாரங்களுடன் சான்று.

சூரியனிலிருந்து வெளிப்படும் ஊதா நிறக் கதிர் வீச்சுக்கு அல்ட்ரா வயலட் ரேஸ் என்று பெயர்.

இந்த ஊதா நிறக் கதிர் உச்சி நேரத்தில் வெளிப்படுகிறது. கிழக்கே உதிக்கும் சூரியன் படிப்படியாக உயர்ந்து உச்சிக்கு வரும் நேரத்தில் ஊதா நிறக் கதிர்களை குளித்துப் பாய்ச்சுகிறது. இந்த நேரத்தில் அல்ட்ரா வயலெட் கதிர்கள் பூமியைத் தாக்குகின்றன.



உச்சி நேரத்தில் நாம் வெளியே செல்லக் கூடாது. அப்படியே வெளியே செல்வதாக இருந்தால் குடை பிடித்துக் கொண்டு போவது நல்லது. உடல் மூடப்பட்டிருக்க வேண்டும். தலைக்குத் தொப்பியோ, உடலுக்குச் சட்டையோ போட்டு மூடியிருக்க வேண்டும். ஊதாக் கதிர்கள் பலவீன மானவர்களின் தோல் பகுதியைத் தாக்குவதால் சருமப் புற்றுநோய் உண்டாகும் அபாயம் உண்டு என்று கூறுகிறார்கள்.

அல்ட்ரா வயலெட் கதிர்களால் உடம்பின் தோல். உதடு, கண்களிலுள்ள கார்னியா தாக்குதலுக்கு ஆளாகிறது. தோல்களிலுள்ள செல்களைத் தாக்கி இரசாயன் மாற்றங்களை உண்டாக்கிப் புற்றுநோய்க்கு இடமளிக்கிறது.

எல்லோருக்குமே இதனால் ஆபத்து உண்டா? எல்லாக் காலங்களிலும் இதனால் அபாயம் உண்டா?

 அல்டரா வயலெட் கதிர்கள் நம்மைத் தாக்காமல் இருக்க விண்வெளியிலுள்ள ஓஸோன் என்று சொல்லப்படும் வாயு மண்டலம் சூரியனிடத்திலிருந்து வரும் இந்தக் கதிர்களைத் தடுத்துச் சிதைத்து விடுகிறது. ஓஸோன் வாயுவில் அடர்த்திக் குறைவு ஏற்படும்போது அல்ட்ரா வயலெட் சந்து பொந்து இடைவெளிகளில் புகுந்து பூமியை நோக்கி வந்து விடுவதும்

உண்டு. அப்போது பாதிப்பு அதிகமாகிறது. நாம் நோய்க்காகச் சாப்பிடும் சில மருந்துகளின் விளைவால் அல்ட்ரா வயலெட் கதிர்கள் ஈர்க்கப்பட்டு நம் உடலுக்குக் கேடு விளைவிக்கிறது. ஊதா நிறக் கதிர்களால் உடலுக்கு நன்மைகளும் உண்டு. ஆனால் இது போன்ற தீமையும் உண்டு என்று தெரிந்து வைத்திருப்பது நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வழி வகுக்கும்.

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

இளம் நரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய தீர்வு

இளநரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய இயற்கை தீர்வு ✍️ தேவையான மூலப்பொருட்கள்: 1.மருதாணி இலை - 1 கைப்பிடி 2.கரிசலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி 3.கறிவேப்பிலை - 1 கைப்பிடி 4.எலுமிச்சை - 1 பழம் ✍️ செய்முறை : 1 - 3 குறிப்பிட்ட இலையை தண்ணீர் விட்ட மைய்ய அரைத்து கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து அரைத்து கொள்ளவும் ✍️ பயன்படுத்தும் முறை: வாரம் ஒரு முறை தலை முடியில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை சீகக்காய் அல்லது உங்கள் தலைக்கு பொருந்தும் ஷாம்பூ பயன்படுத்துங்கள் ✍️ கடைபிடிக்க வேண்டியவை: 1. இளநரை மறைய குறைந்தது 10 வாரம் விடாது பயன்படுத்தினால் உறுதியான பலன் கிடைக்கும் 2.அடிக்கடி எண்ணெய் மற்றும் ஷாம்பூ மாற்ற வேண்டாம் 3.இந்த முடியில் பூசும் பொழுது முடியில் எண்ணெய் பசை இருந்தால் சுத்தமாக பலன் கொடுக்காது, தேவையான நேரத்தில் மட்டும் தயார் செய்து தலையில் தடவுங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்து காய்ந்த கலவை பலன் கொடுக்காது 4.முடிந்த அளவு அந்த 30 நிமிடம் காய்வதும் வெயிலில் காய வைத்தால் இன்னும் மிக நல்ல பலனை பெறலாம் 5.இளநரை என்பது 20-40 வயதிருனருக்கு மட்டுமே பலன் கொடுக்கும் அதற்கு மேல் ...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...