Skip to main content

Posts

Showing posts from October, 2022

Google ads

பொன்னாங்கண்ணி கீரையின் நன்மைகள்-"கீரைகளின் ராஜா" Medical Tamizha

 கீரைகளின் ராஜா-பொன்னாங்கண்ணி கீரை கீரைகளின் ராஜா என்று அழைக்பப்படுவது பொன்னாங்கண்ணி கீரை. அந்த அளவிற்கு மருத்துவ குணங்களை கொண்டது. பொன்னாங்கண்ணி கீரை என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான் எனினும் அதில் உள்ள மருத்துவ குணங்கள் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  பொன்னாங்கண்ணிக்கீரை பூமியில் இருந்து பொன் சத்தை உறிஞ்சி நீரான நிலையில் தன்னுள் பெற்று இருக்கிறது. அதேபோல் மஞ்சள் கரிசாலையும் பொன் சத்தை பெற்றிருக்கிறது. பொன்னாங்கண்ணி கீரை பொன்னாங்கண்ணி ஓர் அற்புதமான உடற்தேற்றி. இன்றைக்கு தங்கபஸ்பம் என்பது உயர் வசதி படைத்தவர்களுக்கு கூட எட்டாத ஒரு மருந்தாகிப்போனது.  ஆனாலும் அந்த சத்து ஏழைகளும் பெறும் விதத்தில் பொன்னாங்கண்ணியில் பொதிந்திருப்பது வியக்கத்தக்க ஒன்றாகும். இந்தக் கீரை பெரும்பாலும் நீர்நிலைகளான குளம் குட்டை கரைகளிலும், வாய்க்கால் கரைகளிலும் இயற்கையாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம்.  பொன்னாங்கண்ணியில்  1) சீமை பொன்னாங்கண்ணி,  2) நாட்டு பொன்னாங்கண்ணி   என இருவகை உண்டு. இதில் சீமை பொன்னாங்கண்ணி பெரும்பாலும் அழகுக்கு வளர்க்கப்படுகிறது. மருத்துவ குணம் குறைவு. பச்சையாக கிடைக்கும் நாட்டு பொன்னாங்கண

பாம்பு சட்டையை உரிப்பதற்கு காரணம் தெரியுமா?

 பாம்பு அதன் சட்டையை உரிப்பதற்குக்காரணம் அதன் வளர்ச்சியே! பழைய தோல் அதன் வளர்ச்சிக்குத்தடையாக இருக்கும் போது நிகழ்கிறது.  ஒட்டுண்ணித் தொற்றைத் தவிர்ப்பதற்காகவும், தனது ஆரோக்கியம் பேணுவதற்காகவுமே பாம்புகள் தோலை உரிக்கின்றன. பழைய தோலுக்குக் கீழேயே புதுத்தோல் வளர்ந்திருக்கும். தனது தோலை உரிப்பதற்கு முன் பாம்புகள் தண்ணீரில் நீந்தும். அதன் காரணமாக உரியப்போகும் தோல் இளக்கம் கொடுக்கும்.  பின் தன் மூக்கை ஒரு கடினமான பாறையிலோ அல்லது மரத்திலோ வைத்துத்தேய்க்கும் போது கிழியும். பின் பாம்பு அதன் பழைய தோலை விடுத்து லாவகமாக வெளியேறும்.  இளவயதுப் பாம்புகள் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை தோலை உரிக்கும். பருவ வயதை அடைந்த பாம்புகள் ஆண்டுக்கு நான்கிலிருந்து எட்டு முறை தான் வாழும் சூழலைப்பொறுத்து சட்டையை உரிக்கும். வயதான பாம்புகள் வருடத்திற்கு ஒரு முறை தோலை உரிக்கும்.